போடி: தேனி அருகே பொம்மயகவுண்டின்பட்டியை சேர்ந்தவர் ராஜா (30). மெடிக்கல் ரெப். இவரது மனைவி காவ்யா (20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. ராஜாவின் சித்தி உமா மகேஸ்வரி போடி சுப்புராஜ் நகர் புது காலனியில் வசித்து வருகிறார். விருந்துக்காக இவர்கள் அங்கு சென்றனர். லண்டனில் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்த உமா மகேஸ்வரியின் மகன் சஞ்சய் (24), விடுமுறையில் வந்திருந்தார். அவர், புதுமண தம்பதியையும், உறவினர் மகனான 12 வயது சிறுவன் சஞ்சய் பிரணவையும் நேற்று காலை பெரியாற்றுக் கோம்பை சின்ன ஆறு பகுதிக்கு காரில் சென்றனர்.