பெரம்பூர்: சென்னை ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூர்த்தி, போலீஸ்காரர் முத்துப்பாண்டி ஆகியோர் நேற்று காலை பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் உள்ள மங்களபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் வந்திறங்கிய நபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது பண்டல், பண்டலாக கஞ்சா இருந்தது. இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.