சென்னை: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா பின்தங்கியிருப்பதற்கு பாஜ அரசின் தவறான கொள்கையே காரணம் என எஸ்.டி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. எஸ்.டி.பி.ஐ., தேசிய செயலாளர் பைசல் இசுதீன் வெளியிட்ட அறிக்கை: உலகளாவிய பசி குறியீட்டில் முந்தைய தரவரிசையில் இருந்து இந்தியா 6 புள்ளிகள் பின்தங்கி 107 ஆக சரிந்தது அதிர்ச்சியளிக்கிறது. பணக்காரர்களுக்கு ஆதரவான ஆளும் பாஜவின் தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவால் நேரிட்ட அவலம் இது. கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்ட 121 நாடுகளில், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளை விட பின்தங்கி இந்தியா 107வது இடத்தில் உள்ளது.