பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் உள்ள இரு அறைகளில் ஒன்று ஓபிஎஸ் பார்வையாளர்களை சந்திப்பதற்கும், மற்றொன்று முக்கிய நபர்களை சந்திப்பதற்குமாக உள்ளது. வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வு அறை தனியாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்த மர்ம நபர்கள், மாடியில் உள்ள ஓய்வு அறையின் கதவை உடைத்து அங்கிருந்த 54 இன்ச் டிவியை தூக்கி சென்றுள்ளனர்.