புழல்: மாதவரம் மற்றும் மஞ்சம்பாக்கம் கிராமத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக வரவேற்கப்படுகிறது என மாதவரம் வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட மாதவரம் மற்றும் மஞ்சம்பாக்கம் கிராமத்தில் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு இணைய வழியில் மனுக்கள் அனுப்பப்பட வேண்டும்.