கிராம உதவியாளர் பணிக்கு நவ.7க்குள் விண்ணப்பிக்கலாம்: மாதவரம் வட்டாட்சியர் தகவல்

புழல்: மாதவரம் மற்றும் மஞ்சம்பாக்கம் கிராமத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக வரவேற்கப்படுகிறது என மாதவரம் வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட மாதவரம் மற்றும் மஞ்சம்பாக்கம்  கிராமத்தில் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு இணைய வழியில் மனுக்கள் அனுப்பப்பட  வேண்டும்.

இதற்கு நவம்பர் 7ம் தேதி கடைசி நாள். இதனை தொடர்ந்து,  படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தேர்வு நவம்பர் 30ம் தேதி மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். நேர்முக தேர்வுகள் டிசம்பர் 15, 16ம் தேதிகளில் நடைபெறும். மனுதாரர் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதவரம் வட்டாட்சியர் வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என மாதவரம் வட்டாட்சியர் நித்தியானந்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories: