புதுடெல்லி: இமாச்சல் பிரதேச வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போட்டால், அந்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றடைந்துவிடும் என்று டெல்லி துணை முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிலாஸ்பூரில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டார். இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்கட்சியாக இருந்தும், ஆம்ஆத்மி கட்சி காங்கிரசை முந்திக் கொண்டு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.