பெரம்பூர்: அயனாவரத்தில், இன்ஸ்டாகிராமுக்கு அடிமையானதால் வேறு ஒருவருடன் ஆட்டம் போட்ட மனைவியை சரமாரியாக வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் சாலமன் (20). இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி (19) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சாலமன் எலக்ட்ரீசியசன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல்களுக்கு ஏற்ற வகையில் நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். நாளடைவில் வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பலமுறை சாலமன் ஈஸ்வரியிடம் எச்சரித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து ஈஸ்வரி வேறு ஒரு நபரிடம் சேர்ந்து சினிமா பாடல்களை இன்ஸ்டாகிராமில் வீடியோக்களாக வெளியிட்டு வந்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.