மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட 23 வது வார்டு தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

புழல்: சென்னை மாதவரம் மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 23வது வார்டு புழல் கன்னடபாளையம் திருவிக. குறுக்கு தெருவில் பழைய கழிவுநீர் கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாய் பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் நிரம்பி தெருவில் பெருக்கெடுத்து  ஓடுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மக்கள் நடந்துசெல்வதற்கு கூட கடும் சிரமப்படுகின்றனர்.

மேலும் கழிவுநீர் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கொசுக்கள் கடிப்பதால் மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் கடும் சிரமத்துக்கு ஆட்படுகின்றனர். எனவே, கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். கழிவுநீர் தேங்குவதை தடுக்கவேண்டும்’ என்று 23வது வார்டு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: