புழல்: சென்னை மாதவரம் மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 23வது வார்டு புழல் கன்னடபாளையம் திருவிக. குறுக்கு தெருவில் பழைய கழிவுநீர் கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாய் பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் நிரம்பி தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மக்கள் நடந்துசெல்வதற்கு கூட கடும் சிரமப்படுகின்றனர்.