லண்டன்: உலகளவில் 100 கோடி பேருக்கு மனக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார். உலக மனநல தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், ‘உலகளவில் மனநலத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். தரமான மனநலப் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் ஏறக்குறைய 1 பில்லியன் (100 கோடி) மக்கள் மனநலக் கோளாறுடன் வாழ்கின்றனர். மனநலம் என்பது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.