தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) பாட்டில் மணி (24). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, மாமூல் கேட்டபது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, பூக்கடை ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக வாழ்ந்து வந்த பாட்டில் மணியை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவுன்குமார் ரெட்டி உத்தரவிட்டார். அதன்பேரில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் இருதயம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள்அமைக்கப்பட்டு பாட்டில் மணியை தேடி வந்தனர்.