சென்னை: எல்ஐசிஎம்எப் மல்டிகேப் நிதி என்னும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் தென் மண்டல தலைவர் வாசுதேவன் தேசிகாச்சாரி கூறியதாவது: எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்ட் நிறுவனம், புதிய மல்டிகேப் நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 6ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை திறந்திருக்கும். இதன் வாயிலாக 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்ட் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திரட்டப்படும் நிதியை, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் தலா 25 சதவீதம் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.