கூடலூர் : கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மன்வயல், அம்பல மூல, சேமுண்டி, கொரவயல், போஸ்பரா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் உள்ளதாக வனத்துறைக்கு விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இப்பகுதியில் புலி மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் தென்படுவதால் மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், கால்நடைகள் வளர்ப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.