சென்னை: முதல்வர் அறிவித்த டாஸ்மாக் சீரமைப்பை செயல்படுத்த வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஏஐடியூசி தென் சென்னை மாவட்ட மாநாடு ஈக்காட்டுதாங்கல் மணிமேகலை அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு தமிழக அரசு, கேரள அரசை போல செயலி (App) உருவாக்க வேண்டும். கட்டிடக் கலைஞர்களுக்கான நல வாரிய திட்ட ஓய்வூதியத்தை ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும்.