சென்னை: தமிழகம் முழுவதும் 2 நாள் நடந்த ஆபரேசன் மின்னல் வேட்டை மூலம் 1,310 ரவுடிகளை தமிழ்நாடு காவல் துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பல ஆண்டுகள் பிடிப்படாமல் இருந்த, பிரபல ரவுடிகளும் அடங்குவர். இதில் சில ரவுடிகள் வெளி மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். அடுத்த 24 மணி நேரத்தில் நடந்த வேட்டையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.