ராஜிவ் காந்தி மருத்துவமனையில் லிப்ட் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினம்தோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும் 4 லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் இரண்டு லிப்ட் நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கும், இரண்டு லிப்ட் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தினந்தோறும் அதிகமாக நோயாளிகள் வருவதால் இரண்டு லிப்ட் போதுமானதாக இல்லை. ஆகவே மேலும் லிப்ட் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதோடு எஸ்கலேட்டர் வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

Related Stories: