சென்னை: குஜராத்தில் நடக்கும் 36வது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் தேர்வு செய்த வீரர்களை அனுமதிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் சார்பில் கலந்துகொள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கு குழு ஒன்றை நியமித்து இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு வாலிபால் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாடு வாலிபால் சங்கம் தேர்வு செய்த வீரர்களை போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்படி ஒன்றிய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டார்.