சென்னை: பெட்டிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கைலாசம் தெருவில் வசித்து வந்தவர் பெருமாள். இவர், தனது குடியிருப்பு முன் சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பெருமாளின் உறவினர் ஆனந்தி என்பவர் கடை அருகில் உட்கார்ந்திருந்த போது அங்கு வந்த ஆனந்தியின் தந்தை ஏழுமலை மகள் ஆனந்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனை பெருமாள் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ஏழுமலை, பெருமாளிடம் தகராறு செய்துள்ளார். அங்கிருந்து கோபமாக சென்ற ஏழுமலை, சிறிது நேரத்துக்குப் பின் மீண்டும் அங்கு வந்து, பெருமாளை தகராறுக்கு இழுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.