பெரம்பூர்: வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த பாஜ நிர்வாகிகள், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். வடசென்னை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசு தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் நவீன்குமார், மண்டல தலைவர் விஜய், துணைத் தலைவர்கள் அகஸ்டின், பார்த்திபன் மற்றும் இளைஞரணியை சேர்ந்த லோகேஷ், சரண், சசிகுமார், ஊடக பிரிவையை சேர்ந்த வெங்கடேசன், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சஞ்சய் உள்ளிட்ட 11 ேபர் பாஜகவில் இருந்து விலகி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை அவரது வீட்டில் சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.