பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், திருப்பூர் மாட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்னேஷ் (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. சிறுமியை விக்னேஷ் பல இடங்களுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. இதற்கு, மடத்துக்குளத்தை சேர்ந்த விக்னேஷின் உறவினர் ஈஸ்வரன் என்பவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி விக்னேஷ் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் கர்ப்பத்தை கலைக்குமாறு விக்னேசின் உறவினர் சின்னசாமி (55) என்பவரிடம் தெரிவித்தார். அவரும் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை சின்னசாமி அங்குள்ள மந்திரவாதி அர்ஜூனன் (60) என்பவரிடம் அழைத்துச்சென்றார். மந்திரவாதியும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.