சென்னை: ரீமிக்ஸ் பெயரில் என் பாடல்கள் சிதைக்கப்படுவதை பார்க்கிறேன் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மான் இசையமைத்த பல பாடல்களை வடநாட்டில் ரீமிக்ஸ் செய்து வருகிறார்கள். குறிப்பாக அவரது இந்தி பாடல்களை அதிகளவில் ரீமிக்ஸ் செய்கிறார்கள். இது பற்றி ரஹ்மானிடம் கேட்டபோது, அவர் கூறியது: எனது பாடல்கள் பெருமளவில் ரீமிக்ஸ் செய்வதை பார்க்கிறேன். ஒவ்வொருமுறையும் அது சிதைக்கப்படுகிறதோ என நினைக்கிறேன். நானும் பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். ஒரிஜினல் அழகு கெடாமல், ஒரிஜினல் தன்மை மாறாமல் அதை ரீமிக்ஸ் செய்துள்ளேன். சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களும் அதை பாராட்டியுள்ளனர்.