திருச்சி : திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று ஹவுரா- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலில் விழுப்புரம் ரயில்வே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வினோத்குமார், சிவராமன், விஜய் மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர்.
அப்போது ரயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் சுமார் 2 கிலோ 50 கிராம் கஞ்சாவும், 900 கிராம் எடை கொண்ட கஞ்சா எணணெய்யும் இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.