கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பல்வேறு சிறப்பு மிக்க பகுதிகள் உள்ளன. முக்கடல் சங்கமம், சூரிய உதயம் மற்றும் மறையும் காட்சி, பகவதி அம்மன் கோயில், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தினந்தோறும் காலை 8 மணிக்கு டிக்கெட் வழங்கப்பட்டு 8.30 மணி முதல் போக்குவரத்து தொடங்குகிறது. ஆனால் அவ்வப்போது கடல் நீர்மட்டம் திடீரென்று தாழ்வடையும். அப்போது படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கும்.