உடுமலை: தளி- ஆனைமலை சாலையில், கரட்டுமடத்தில் இருந்து தேவனூர்புதூர் செல்லும் வழியில் அனுமந்தப்பட்டணம் கிராமத்தில் பாலாறு செல்கிறது. இந்த பாலாற்றில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது. இங்கு பதுங்கியுள்ள விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறையினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.