திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமியின் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் மாணவ, மாணவிகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.எம்.எஸ்.செல்வி தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜி, சுகாதார ஆய்வாளர் சுதர்சனம் ஆகியோர் கல்து கொண்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து மாணவிகளிடையே எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.