மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைக்கல்லூரியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் எம்எல்ஏக்கள் நேற்று ஆய்வு செய்தார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயிலில் ரூ.60 லட்சம் மதிப்பில் 45 அடி உயரத்தில் அழகிய ‘சிற்பக்கலைத்தூண்’ கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம் ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரம் வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் நடந்த சர்வதேச 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெறும் சதுரங்கவீரர், வீராங்கனைகளை, பயிற்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், பார்வையாளர்களை கவரும் வகையில் 45 அடி சிற்பக்கலைத்தூணை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 27ம் தேதி திறந்து வைத்தார்.