தாராபுரம்: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் பற்றி புகார் கூறிய எடப்பாடிக்கு சிறந்த நகைச்சுவைக்கான பரிசு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 24 அரசு பள்ளிகளை சேர்ந்த 2,839 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று வழங்கினர். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிமுக ஆட்சிதான் நடந்து வந்தது.