எல்லப்பட்டி தடுப்பணைக்குள் தத்தளித்த வாலிபர் உயிருடன் மீட்பு-ஒரு மணி நேரம் திக்..திக்..

சின்னமனூர் : சின்னமனூர் அருகே எல்லப்பட்டி முல்லைப் பெரியாறு மார்க்கையன் கோட்டை தடுப்பணையில் குளிக்க சென்றவர் தவறி விழுந்து தத்தளித்த வாலிபரை உயிருடன் மீட்டனர்.

சின்னமனூர் அகமுடையார் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் நந்தகோபால் (22). இவர் நேற்று மதியம் சில நண்பர்களை அழைத்துக் கொண்டு சின்னமனூர் அருகே எல்லப்பட்டி முல்லைப் பெரியா ற்றுக்குள் இருக்கும் மார்க்கையன் கோட்டை மெகா தடுப்பணைக்கு குளிக்கச் சென்றனர்.

அப்போது ஆற்றின் ஒரு பகுதியில் ஓரமாக இறங்கி குளித்து கொண்டிருந்த போது திடீரென வழுக்கி உள்ளே ஆழமான பகுதி ஆற்றுக்குள் விழுந்து விட்டார்.நீச்சல் அடித்து மேலே வர முடியாமல் தத்தளித்து ஒரு பாறையினை பிடித்து நின்று நிலை தடுமாறி நின்று கொண்டிருந்தார்.இதனை கண்ட மற்றவர்கள் உடனடியாக சின்னமனூர் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ஆற்றில் பாறையை பிடித்து கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி உயிருடன் மீட்டனர்.

Related Stories: