சென்னை: சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை (56) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 11ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்தபோது திடிரென்று கோதை மயங்கி விழுந்துள்ளார். மூளையில் ரத்தம் உறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட கோதை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோதை நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.