கேளம்பாக்கத்தில் ஊட்டச்சத்து மாத விழா

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாதம் மற்றும் ரத்தசோகை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் வரவேற்றார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். அனைவரும் ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் மற்றும் இரத்தசோகை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா வினோத்கண்ணன், கேளம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் பாஸ்கரன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Related Stories: