சென்னை:தமிழகத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக முக்கிய கோயில்களில் கலை பண்பாட்டுத்துறையினருடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயிலில் தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் புலவர் ராஜாராம் தலைமையில் பட்டிமன்றம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுசித்ரா குழுவினரின் பக்தி பாட்டு, திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் மஹதி குழுவினரின் பக்தி இன்னிசை, திருவானைக்காவல்,