சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் சமூக நீதியில் அடுத்து ஓர் முக்கிய மைல் கல்லாக அமையும் என்று முதல்வருக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் காலை உணவின்றி பசியோடு வரக்கூடிய குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்த முடியாது என்கிற காரணத்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கக் கூடிய அற்புதமான திட்டத்தை அறிவித்து, அதனை தொடங்கி வைத்திருக்கிறார்.