சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். சென்னை தலைமை செயலக வளாகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி ‘‘சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்றனர்.