சென்னை: துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.23.37 கோடி மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, “விவசாயத்திற்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்பு திட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வைப்புத்தொகை குதிரை திறனுக்கேற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.