கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

பெரம்பூர்: வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த கார்த்திக் (30) பெரம்பூரில் கடந்த புதன்கிழமை 5 பேரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி காட்டான் மோகனின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார், காட்டன் மோகன், செந்தில்குமார், பீஸ்கா கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதவன் நேற்று திருவள்ளுவர் கோர்ட்டில் சரணடைந்தார். மற்றொரு குற்றவாளியான சரவணன் செம்பியம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த மாதவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: