கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: 70 வக்கீல்கள் சார்பில் நீதிபதியிடம் முறையீடு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 26ம் தேதி அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை  எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில் 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த மனு தொடர்பாக, பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையிட்டார்.வேறொரு நாளில் முறையிடுமாறு நீதிபதிகள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: