ஒரு வாரத்திற்குள் போலி பத்திரங்களை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் அமலுக்கு வர உள்ளது: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: ஒரு வாரத்திற்குள் போலி பத்திரங்களை சார்பதிவாளர் ரத்து செய்யும் சட்டம் அமலுக்கு வர உள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் ஒருங்கிணைத்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு செய்த பின் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். போலி பத்திரம் எப்போது பதிவு செய்திருந்தாலும் ரத்து செய்யப்படும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுக்கு காலதாமதம் ஆவதாக எழுந்த புகாரை அடுத்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related Stories: