சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை அறிந்துகொண்ட தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு செல்ல டிக்கெட் கட்டணத்தை 2 முதல் 3 மடங்கு உயர்த்தியுள்ளனர்.