புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள விமான தளங்களை பாதுகாப்பதற்காக, 100 டிரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக விமானப்படை தெரிவித்தது.ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது, கடந்தாண்டு ஜூனில் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருள் ஏற்றி வந்த 2 டிரோன்கள் நடத்திய இந்த தாக்குதலில் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானப்படை தளத்துக்குள், டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எதிர்கொள்ள, வான்வெளி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.