சென்னை: பாஜ நிர்வாகியான சசிகலா புஷ்பா சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் பாஜ சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கூட்டம் அலைமோதியதால் நெரிசலாக இருந்தது. கூட்டத்துக்கு நடுவே முன்னாள் எம்பியும், பாஜ மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது பாஜ மாநில பொதுச்செயலாளரான பொன்.பாலகணபதி சசிகலா புஷ்பாவுக்கு அருகில் மிக நெருக்கமாக இருந்தார். அவர் அஞ்சலி செலுத்துவதில் கவனம் செலுத்தாமல், சசிகலா புஷ்பாவை சங்கடத்துக்குள்ளாக்குவதிலேயே குறியாக இருந்தார்.