திருத்தணி: திருத்தணி காந்தி ரோடு சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகளும் மக்களும் தவிக்கின்றனர். இவற்றை அகற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மபொசி. சாலை, அக்கையா நாயுடு சாலை, கடப்பா ட்ரங்க் ரோடு, சித்தூர் சாலை பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கி வருகின்றன. திருத்தணி நகராட்சி கழிவுநீர் கால்வாய் அடியில் ரயில்வே தண்டவாளம் போடப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் காந்தி ரோடு, கலைஞர் நகர், முருகப்ப நகர் வழியாக வெளியேறுகிறது. திருத்தணி காந்தி ரோட்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே திருத்தணி ரயில் நிலையத்துக்கு சாலை செல்கிறது.