திருத்தணி: திருத்தணி உள்ள உப கோயில்களுக்கு செல்லும் பாதையில் பாம்பு, தேள்கள் வருவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் 26 உப கோயில்கள் இயங்கி வருகிறது. இந்த கோயில்களில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் மேற்பார்வையில், நடைபெற்று வருகிறது. உப கோயிலான திருத்தணி நந்தியாற்றின் கரையில் உள்ள கோட்டை ஆறுமுக சுவாமி கோயில், விஜயராகவ பெருமாள் கோயில், விஜயலட்சுமி தாயார் கோயில், ஆஞ்சநேயர் கோயில், நாகாளம்மன் கோயில், பைரவர் கோயில் மற்றும் விநாயகர் சன்னதிகள் அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைத்துள்ளனர்.