தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண் காரில் கடத்தி செல்லப்பட்ட சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி அருகே தட்டப்பாறை பகுதியை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண்ணுக்கும், கோவில்பட்டியை சேர்ந்த ராகவன் என்பவருக்கும் இடையே கடந்த 7-ம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதை முன்னிட்டு எல்லம்மாள் தான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் வெள்ளையென்னை எழுதிகொடுக்க சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டுருந்த போது அங்கே வந்த கார் ஒன்று எல்லம்மாளை அங்கே இருந்து கடத்தி சென்றுள்ளது.