114வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிக்கின்றனர்: திமுக மாவட்ட பொறுப்பாளர் அறிக்கை

சென்னை: அண்ணாவின் 114வது பிறந்த நாளில், சென்னையில் அவரது சிலைக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதுகுறித்து சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நே.சிற்றரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணாவின் 114வது ஆண்டு பிறந்த நாளான வரும் 15ம் தேதி காலை 8 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு திமுக பொது செயலாளர் துரை முருகன் - பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

எனவே இதில் மாநில அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட திமுக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: