சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதால், சென்னை காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற ஜாமீன் நிபந்தனையை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடந்த இந்து முன்னணி விழாவில் பேசிய மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன்,ரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினரால் ஆகஸ்ட் 15ம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.