சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு விரைவில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் மதன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் ஜனாதிபதியும், இளைஞர்களின் நாயகனுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவ சிலை சென்னையில் அமைக்க வேண்டும் என்று 5 வருட காலமாக போராடி வருகிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடத்தில் கோரிக்கை வைத்த போது உடனடியாக நிறைவேற்றி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.