கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு மக்கும் குப்பையை பதப்படுத்தி அரைக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து நேற்று திடீரென காற்றில் நச்சு வாயு கலந்தது. இதனால் சுற்று பகுதியில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெங்கடேசன் (26), ஸ்ரீராம் (32), ராமதாஸ் (57), ராமநாதன் (25), தர்மராஜ் (24) உள்ளிட் 5 பேரை நச்சுவாயு தாக்கியது. இதில் அவர்கள் மயக்கமடைந்தனர். இதைக்கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை உடனடியாக மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.