நீட் தேர்வில் தோல்வி திருத்தணி மாணவி ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

சென்னை: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த  மாணவி ஆசிட் குடித்து  தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகள் ஜெயசுதா (18). நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த ஜெயசுதா பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்துள்ளார். நேற்று காலை கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த ஜெயசுதாவை, அவரது தாயார் லதா மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: