மடிப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய 2 புரோக்கர்கள் கைது; 4 வெளிமாநில பெண்கள் மீட்பு

சென்னை: மடிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 4 வெளிமாநில பெண்கள் மீட்கப்பட்டனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை நகருக்கு வேலை தேடி வரும் இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தை கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், மத்திய குற்றப்பிரிவின், விபச்சார தடுப்புப்பிரிவு காவல் குழுவினர் மூலம் கண்காணித்து பாலியல் புரோக்கர்களை கைது செய்து, அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் தலைமையில் விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று மடிப்பாக்கம், ராம்நகர் பகுதியில் உள்ள  ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்தபோது, அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்பில்  பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் ெகாடைக்கானல், அன்னை தெரசா நகரை சேர்ந்த மகேந்திரன் (34), பம்மல், திருவள்ளுவர் தெரு, காந்திநகர் பகுதியை சேர்ந்த மணிமாறன் (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 4 வெளிமாநில பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகிவுள்ள பாபு (எ) ராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: