சென்னை: ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கருஞ்சட்டைப் பேரணி நேற்று நடந்தது. கோட்டை நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழக அரசு வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று, ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில், ஆயுள் சிறைவாசிகளையும், 6 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டைப் பேரணி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று நடந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், அபுபக்கர் சித்திக், நஜ்மா பேகம், பொருளாளர் அமீர் ஹம்சா முன்னிலை வகித்தனர்.