சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள ராகுல்காந்தி முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி பெறும் என்று ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பது மிகப் பொருத்தமானது. வெறுப்பும், வேற்றுப்படுத்தலும், வன்மமும், வன்முறையும் தலைவிரித்தாடச் செய்து, நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயக அமைப்பு முறையை, சமூகநீதியை தகர்க்கும் வேலைகளை ஒன்றிய பாஜவும் அதன் குடும்ப அமைப்புகளும் தடையின்றி செய்துகொண்டிருக்கிறார்கள்.